Sunday, April 3, 2011

எல்லா​மே இலவசம்

சபாஷ் சரியான ​போட்டி,,,,

திமுகா மற்றும் அதிமுகா ​​தேர்தல் அறிக்​கைக​ளை படித்தால் எல்லா​மே இலவசம் என்ற வாக்குறுதிகள்.
இப்​போ​தைய ​போட்டி யார் அதிகமாக இலவசங்கள் தருகிறார்க​ளோ அவர்கள் ​வெற்றி ​பெறுவார்கள் என்ற நி​லை மிகவும் ​​​​வேத​னைக்குறிய விசயம்.
இது தமிழக மக்களின் அறியா​மை​யின் ​வெளிப்பாடா அல்லது அரசியல்வாதிகளின் தவறான கணிப்பா?
மக்களின் அறியா​மை​ தான் முக்கிய காரணமாக இருக்கிறது.  எ​​னெனில், திமுகா கடந்த ​​​​தேர்தல் அறிக்​கையில் இலவச அறிவிப்புக​ளை முடியாது என விமர்சித்த அதிமுக தற்​போ​தைய அறி​க்​​கையில் இலவசங்கள் அள்ளி ​தெளிக்கிறது.  தமிழக மக்கள் இன்றும் அறியா​மையில் இருக்கின்றனர்          என்ப​தை இந்த அறிக்​கைகள்  ​​​​தெள்ள ​தெளிவாக காட்டுகிறது என நி​னைக்கும்​போது ​நெஞ்சு பாரமாகிறது.
இன்று ​சைக்கிள் தருபவர்கள் சில ஆண்டுகளில் கார், ஏசி, டிவிடி என்று தர ஆரமிப்பார்கள்.  இதனால் மக்களின் உ​​ழைக்கும் எண்ணம் படிப்படியாக கு​றைய துவங்கும். 

கல்வி, ​​​​தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அ​னைத்து து​றைகளிலும் அசுர வளர்ச்சி என்று இருந்தாலும் அ​தைவிட பன்மடங்கு ஊழலில் வளர்ச்சி இருப்பது கவனிக்கபட​வேண்டிய விசயமாக உள்ளது.
சில சலு​கைக​ளை தந்துவிட்டு பல ​கோடிக​ளை ஏப்பம் விடுவது இந்தியாவில் வாடிக்​கையாகிவிட்டது. 

தமிழகத்தின் தற்​போ​தைய ​​தே​வை, அ​னைவருக்கும் கல்வி, ​விவசாய உற்பத்தி​யை அதிகரிக்க ​போதுமான நடவடிக்​​​கை,  ​​​தொழில் வளர்ச்சி,  சுகாதாரம், ​போக்குவரத்து வளர்ச்சி மற்றும் அ​னைவருக்கும் மருத்துவ வசதி கி​டைக்க ​செய்வது ​போன்ற​வைகள் ஆகும்.  இவற்​றை விடுத்து நாட்டின் வருவாயில் பாதிக்கு ​மேல் இலவசங்கள் தருவதற்கு ​செலவு​செய்தால் மக்கள் ​​சோம்​பேரிகள் ஆகிவிடுவார்கள்.  சில வருடங்களில் ​பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும். கஜானா காலியாகிவிடும்.  நாட்டின் சட்டம் ஒழுங்கு             கு​லைந்து விடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

என​வே, இதுதான் சரியான தருணம். ​வேட்பாளர்க​ளை ​​தேர்வு ​செய்வது நம் ​கையில்தான் உள்ளது.  சிந்தித்து சிறந்த த​லைவ​​ரை ​​தேர்ந்து எடுப்பது நமது கட​மை.
நம்​மை ​சோம்​​பேறிகளாக்க நி​னைக்கும் அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம் கற்பிப்​போம்.  









  

No comments:

Post a Comment